கட்டுரை, கருத்தறிதல்

கட்டுரை 
உயர்நிலை 1 

பின்வரும் கட்டுரைக் குறிப்புகளைக் கவனமாகப்  படித்துவிட்டு, ஒரு கட்டுரை எழுதவும். (120 சொற்கள்)


என் குடும்பம் 

முன்னுரை 
Ø குடும்பம் என்பது என்ன
Ø தாய் தந்தை  பற்றிய இனிய தொடர்கள் 
Ø அதன் அவசியம் 
உடல் 
பத்தி 1  
முதலில் தந்தையைப் பற்றி எழுதவும்
முழு விவரம் 

பத்தி 2 
தாய் 
பழமொழி மற்றும் அவரைப் பற்றிய விவரம் 

உடன் பிறந்தவர்கள் 
சகே தரன்  சகே தரி 
அவர்களைப் பற்றிய விவரங்கள் 
படிப்பு
குணம்
உன்னை பற்றிய விவரம் 
உன் குணம்
விருப்பம் 

முடிவுரை 
ஆகவே குடும்பம் என்பது தந்தைதாய் மற்றும்  பல குடும்ப உறுப்பினர்களைக் கொண்டதே ஆகும்அதில் உள்ளவர்கள் அனைவரும் ஒற்றுமையாகவும் இனிய எண்ணத்தே டும் இருந்தால் அந்தக் குடும்பம் ஒரு பல்கலைக் கழமாக விளங்கும் என்று கூறலாம் அல்லவா?      



கட்டுரை 2 

25,9. 15

இந்த குறிப்புகளைப் படித்துவிட்டு கொடுக்கப்பட்டுள்ள தலைப்பில் ஒரு கட்டுரை எழுதவும். 


கல்வி. அது நமது கண்கள்

அரிது அரிது மானிடராய் பிறத்தல் அறிது
அதனினும் அரிது கூன்,குருடு,செவிடு,
பேடு நீங்கிப் பிறத்தல் அரிது.
                                  என்று மொழிந்துள்ளார் ஒளவை மூதாட்டி. இத்தகைய  அரிதான மானிடர்கள் இந்த உலகில் தோன்றி வாழ்ந்து வரும் வாழ்க்கையில் புகழுடன் வாழ வேண்டியது அவசியம். அதனால்தால் புலவன் ஒருவன்,

உன் தலையை புகழால் அலங்கரி
மகுடங்களால் அல்ல
ஏனென்றால் மகுடங்கள்
தலை மாறக் கூடியவை.
                                  என்று கூறினான்.நீங்காத புகழ்பெற வாய்ப்பமைத்துக் கொடுப்பதே கல்வி மட்டும்தான். இத்தகைய கல்வியைப் பெற கூடிய இம்தான் பள்ளி அறை. பள்ளி அறை என்றால் இருபொருளுண்டு. ஒன்று பாடம் படிக்கும் இடம், மற்றொன்று தூங்கும் இடம். இரண்டிற்கும் தமிழ் மக்கள் ஒரே பெயரை வைத்து மகிழ்ந்தது ஏன்?
கல்வியால் வளர்வது அறிவு. தூக்கத்தால் வளர்வது உடல். இரு வளர்ச்சியும் தேவை. உடலின் வளர்ச்சியே வாழ்வின் வளர்ச்சி. அறிவின் வளர்ச்சியோ உயர்வின் வளர்ச்சி ஆகும். ஆகவே இரண்டின் வளர்ச்சிக்கும் காரணமான இடம் பள்ளி அறை.  

ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவர்க்கு
எழுமையும் ஏமாப்பு உடைத்து.

என்கிறார் வான் புகழ் வள்ளுவர். ஒரு பிறவியில் கற்கும் கல்வி 7 பிறவியிலும் சென்ற உதவும். அதனால்தான் இந்தப் பிறவியில் கற்க வேண்டும். வாழ்க்கை கல்வி,வாழ்க்கைக்கு கல்வி, வாழ்நாள் கல்வி என்றெல்லாம் பேசப்படுவதே இந்தக் கல்வி ஒருவனை உயர்த்தி வாழ்வில் நன்மைகளைக் காட்டிடும் என்பதாலேயே.
கல்வி கற்கவே இறைவன் இரு கண்களை நமக்கு தந்துள்ளார்.
இதனை பொய்யாமொழிப் புலவர்,
கண்ணுடையோர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையார் கல்லாத வரே
என்கிறார்.
கற்பவர்கள் முகத்திலிருப்பதே கண்கள். கல்லாதவர் முகத்திலிருப்பது புண்கள் என்பதே இதன் பொருளாகும். விலங்குகளுக்கும் கண்கள் உண்டு. பார்க்க மட்டுமே அவை பயன்படுகின்றன. ஆனால் மனிதர்களின் கல்களே படிக்கவும் பார்க்கவும் பயன்படும். ஆகவே நாம் கற்போம் ,மற்றவரயும் கற்க வைப்போம்.
  



கட்டுரை எழுத இனிய தொடர்கள். 



நீதி நூல்  - நல்வழி

1.  வரவறிந்து செலவிட வேண்டும்.
ஆன முதலில் அதிகம் செலவானால்
மானம் அழிந்து மதிகெட்டுப் போனதிசை
எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லனாம் நாடு

2.  பசிவந்திட பத்தும் பறக்கும்
மானம் குலக்கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவம் உயர்ச்சி,தாளாண்மை, தேனின்
கசிவந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்திடப் பறந்து போம்

3.  பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை
கல்லானே ஆனாலும் கைபொருளொன்று உண்டாயின்
எல்லாரும் சென்றங்கு எதிர்கொள்வர், இல்லானை
இல்லாளும் வேண்டாள் மற்று ஈடுறெடுத்த தாய் வேண்டாள்
செல்லாது அவன் வாயிற் சொல்

4.  உரைத்தாலும் பேதை உணரான்
பூவாதே காய்க்கும் மரமுமுள மக்களுளும்
ஏவாதே நின்றுணர்வார் தாமுளரே, தூவா
விரைத்தாலும் நன்றாக வித்தெனவே பேதைக்கு
உரைத்தாலும் தோன்றா துணர்வு


நறுந்தொகை
5.   எழுத்தறி வித்தவன் இறைவன் ஆவான்

6.   சுடினும் செம்பொன் தன்னொளி கெடாது

7.   பெருமையும் சிறுமையும் தான்தர வருமே

8.   கற்கை நன்றே கற்கை நன்றே

பிச்சை புகினும் கற்கை நன்றே

9.   எக்குடிப் பிறப்பினும் யாவரே யாயினும்
அக்குடியிற் கற்றோரை மேல் வருக என்பர்

10.        அச்சமும் நாணமும் அறிவிலோர்க்கு இல்லை

11.        கொடுங்கோல் மன்னன் வாழும் நாட்டில்

கடும்புலி வாழும் காடு நன்றே


12.         பொய்யுடை ஒருவன் சொல் வன்மையினால்
மெய்போலுமே மெய்போலுமே

13.        மெய்யுடை ஒருவன் சொலமாட் டாமையால்
பொய் போலுமே பொய் போலுமே

14.        துணையோடு அல்லது நெடுவழி போகேல்


மூதுரை

1.  பயன் கருதாது அறம் செய்க.
நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால்  அந்நன்றி
என்று தருங்கோல் என வேண்டாம் / நின்று
தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரை
தலையாலே தான் தருத லால்

2.  அறிவு செல்வம்

நீரளவே ஆகுமாம் நீராம்பல் தான் கற்ற
நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு








3.  நல்லார் தொடர்பின் நலம்
நல்லாரைக் காண்பதும் நன்றே நலமிக்க
நல்லாற்சொல் கேட்பதுவும் நன்றே நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே அவரோடு
இணங்கி இருப்பவும் நன்றே

4.  அடக்கத்தின் சிறப்பு
அடக்க முடையார் அறிவிலார் என்றெண்ணி
கடக்க்க் கருதவும் வேண்டா, மடைத்தலையில்
ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்
வாடி இருக்குமாம் கொக்கு

5.  உண்மையான உறவு
அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவை போல
உற்றழித் தீர்வார் உறவல்லர், அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறுவார் உறவு.

6.  அரசனும் அறிஞனும்
மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனிற் கற்றோன் சிறப்புடையன், மன்னற்குத்
தன்தேச மல்லாற் சிறப்பில்லை கற்றோருக்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.    

கட்டுரை 3 
இது ஒரு மாதிரி கட்டுரை 
படிக்க, பிறகு சிந்திக்க ,எழுதிப் பழகு.

1.  மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நற்பண்புகள் பற்றி விளக்குக.

அரிது அரிது மானிடராய்
பிறத்தல் அரிது.அதனினும் அரிது
கூன்,குருடு, செவிடு,பேடு
நீங்கிப் பிறத்தல்
      என்றார் நம் மூதாட்டி ஒளவையார். இத்தகைய அரிதான மனிதப்பிறவி என்பது வாழ்வில் ஒரு முறைதான் வரும். அந்தப் பிறவியில் மனிதனுக்கு அமையும் பல வாழ்க்கைப் பருவங்களில் மாணவப் பருவமே மிகவும் மேம்பட்டது. மற்ற பருவங்களான குழந்தைப் பருவம், வேலைப் பருவங்களில் சிறப்பெய்த இந்த மாணவப் பருவமே காரணமாகும். அந்தப் பருவத்தில் மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நற்பண்புகள் சொல்லி முடியாத அளவிற்கு உண்டு. ஆனால் அவற்றுள் சிலவற்றை நாம் இக்கட்டுரையில் ஒரு கண்ணோட்டம் இடுவோம்
       மாணவன் என்று சொன்னாலே மாண்பு அவன் என்று பொருள்படும். அதாவது மாண்பை எல்லாம் பெற்றவன். எல்லா சிறப்பு என்பது பொருளாகிறது. அதில் மிகவும் முக்கியமானது கல்வியைக் போற்றிக் கற்றுக்கொள்ளல் ஆகும்.
கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்லை மற்றை எவை
என்பது வள்ளுவம் அன்றோ? உலகில் சிந்தசெல்வம் கல்வியே ஆகும். அதைத் தவிர மற்றைகள் செல்வமாக மதிக்கப்படுவதில்லை. என்பதே இதன் பொருள். அத்தகைய உயர்ந்த செல்வத்தை நாம் பெறாமல் இருப்பின் அதனால் கேடு வந்து சேர்வது நமக்குத்தானே. பெற்றோர்கள் தம் மக்களிடம் பெரு மதிப்பு வைத்துள்ளர். அவர்கள் மனம் மகிழும்படி செய்வதும் மாணவர்களனி முக்கிய கடமை ஆகும். பள்ளியில் பாடங்களில் தலைசிறந்த மாணவர்களாக நாம் திகழ்ந்தால்தான் பெற்றோரின் உச்சி குளிரும். நம்மை ஈன்றெடுத்தவர்கள் இந்தப் பிள்ளையைப் பெற்றெடுக்க என்ன தவம் செய்தோனோ என்று எண்ணும்படி நாம் பள்ளியில் கல்வி கேள்விகளில் உயர்ந்து விளங்க வேண்டும்.
மாணவர்களின் வாழ்க்கையில் ஒழுக்கமும் மிகவும் அவசியம். நாம் என்னதான் படித்து மேம்பட்ட நிலையில் வாழ்ந்தாலும் நம்மிடம் உயர்ந்த ஒழுக்கம் இல்லை என்றால் யாரும் நம்மை மதிக்க மாட்டார்கள்.
அதனாற்றான் வள்ளுவப் பெருந்தகை,
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும் 
                    என்கிறார். நம்முடைய உயிரைவிட ஒழுக்கம் போற்றப்பட காரணம் என்ன? ஆமாம் ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தால்தான் கல்வி பெறவும் அது உதவும். வகுப்பில் உட்கார்ந்து கட்டுப்பாட்டோடு கல்வியைக் கேட்கவும் ஒழுக்கம் தேவை அன்றோ? சதா விளையாடிக் கொண்டும், ஆசிரியர்களை மதிக்காமலும் இருந்தால் எப்படி கல்வி பெற முடியும்? வீட்டிலும் பெற்றோரிடமும் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். பண்புகளில் ஒன்றே ஒழுக்கம் ஆகும். நமது நாட்டிலும் மக்கள் ஒழுக்கத்தை போற்றியே வாழ்கிறார்கள். அது இல்லை என்றால் சட்டத்திட்டங்களுக்கு அஞ்சாமல் வாழ முற்படுவோம். விளைவு சிறைத்தண்டனையாகவே முடியும். ஆகவே மாணவர்கள் நல்ல ஒழுக்கத்தை போற்றி வாழ வேண்டும்.
       மாணர்குரிய பண்புகளில் உயர்ந்த மற்றொன்று உழைப்பில் நம்பிக்கை கொண்டு வாழ்வது ஆகும்.
கைகளைப் போல ஒரு நண்பன் இல்லை
கால்களைப் போல் ஒரு தொண்டன் இல்லை
உழைப்பது போல இன்பம் இல்லை
இதை உணர்ந்தவர் வாழ்வில் துன்பம் இல்லை
                                        என்பது ஒரு கவிஞரின் அமுதவாக்காகும். மக்களாகப் பிறந்தவர்கள் உழைக்க வேண்டும். ஒவ்வொரு பருவத்திலும் ஒருவிதமான உழைப்பு உண்டு. பள்ளிப்பருவத்தில் கல்விக்காக உழைப்பது. இளைய பருவத்தில்  பொருள் சேர்க்க உழைப்பது. உழைத்த வாழ வேண்டும். பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே. இதுவே நம்முடைய தாரக மந்திரமாக இருக்க வேண்டும். யார் உழைக்க அஞ்சுகிறாரோ, அவர் சோம்பேறியாகவே இருப்பார். சோம்றிகளின் வாழ்வில் வெற்றி பூ பூக்காது. உனக்குத் தேவையான ரொட்டித்தண்டை உன் வியர்வையின் மூலம் பெற வேண்டும் என்றார் கர்த்தர். ஆகவே சிறுவயது முதல் உழைக்க அஞ்சாமல் இருந்தால் மாணவர்களின் வாழ்க்கையில் வெற்றி நிச்சயம்.
       நல்ல நண்பர்களைத் தேடி அலைவதும் ஒரு நல்ல பண்பேயாகும். வாழ்க்கை நதியின் போக்கை மாற்ற வல்ல வல்லமை படைத்தவர்களே நண்பர்கள். நட்பில் நல்ல நட்பும் உண்டு. தீய நட்பும் உண்டு. நல்ல நண்பர்களைப் பெறுலதே ஒரு பெரிய முயற்சியாகும். அதனால்தான் வள்ளுவர்
அககநக நட்பதே சாலச்சிறந்தது என்கிறார். நமது நண்பர்கள் நமது உள்ளத்திற்கு உவகை ஊட்ட வேண்டும். நீண்ட காலம் தொடரும்படியாக இப்போது யாரும் நட்பு கொள்வதில்லை. இது அவசரமான உலகம்     அவசரமாக பிறந்து, அவசரமாகவே வாழ்ந்து அவசரமாகவே இறந்தும் விடுகிறோம். அப்படிப்பட்ட அவசர உலகத்தில் உள்ளத்தோடு ஒட்டிய உயறை நிறைநாட்டிக் கொள்ள உறவுகளைவிட நட்பே சாலச்சிறந்தது. அதை நாடிச் சென்று உற்ற நண்பர்களையும் பெற்றுக் கொள்ள வேண்டும். இதை மாணவப் பருவத்தில் செய்தலன்றி வேறு எப்போதும் செய்ய முடியாது.
            ஆகவே, வாழ்வில் நற்புகள் என்று போற்றப்பட வேண்டிய குணங்களை இளம் வயது முதலே மாணவர்கள் பெற வேண்டும். இதற்கு ஆரம்பத்தில் வழி காட்ட வல்லவர்கள் அன்னையும் பிதாவும் ஆவார்கள். நல்ல கல்விச் செல்வத்தைப் பெற பாடுபட்டு உழைப்பதும் ஒரு நல்ல பண்பே ஆகும். ஒழுக்கம் இல்லாத மனிதனை யாரும் பாராட்டி போற்ற மாட்டார்கள்.அத்தோடு நல்ல நட்பும் காலத்தோடு எதையும் செய்யும் குணமும்,உழைத்தலில் நம்பிக்கையும் இருந்தால் மாணவர்களின் வாழ்வில் வெற்றிப் பூ கட்டாயம் பூக்கும் என்பதில் ஐயமில்லை.        

     






  

No comments:

Post a Comment